இஹைக1ஸ்த2ம் ஜக3த்1க்1ருத்1ஸ்னம் ப1ஶ்யாத்3ய ஸச1ராச1ரம் |
மம தே3ஹே கு3டா3கேஶ யச்1சா1ன்யத்3த்3ரஷ்டு1மிச்1ச2ஸி ||7||
இஹ--—இங்கே; ஏக—ஸ்தம்---ஒன்று கூடிய; ஜகத்--—ப்ரபஞ்சம்; கிருத்ஸ்னம்—--முழு; பஶ்ய--—இதோ கவனி; அத்ய--—இப்பொழுது; ஸ--—உடன்; சர—--அசையும்; அசரம்—--அசையாத; மம--—என்; தேஹே--—இந்த வடிவத்தில்; குடாகேஶ--—உறக்கத்தை வென்ற அர்ஜுனன்; யத்-—எதுவாக இருந்தாலும்; ச—மேலும்; அந்யத்—--வேறு; த்ரஷ்டும்--—பார்க்க; இச்சஸி--—நீ விரும்புகிறாய்
BG 11.7: இப்பொழுது பார், அர்ஜுனா, முழுப் ப்ரபஞ்சமும், அசையும் மற்றும் அசையாத அனைத்தும், என் ப்ரபஞ்ச வடிவில் ஒன்று கூடியிருக்கிறது. நீ வேறு எதைப் பார்க்க விரும்புகிறாயோ, அதையெல்லாம் இந்தப் ப்ரபஞ்ச வடிவில் கவனி.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்வரூபத்தைக் காணச் சொன்னதைக் கேட்ட அர்ஜுனன் அதை எங்கே பார்ப்பது என்று யோசிக்கிறார். அது பரம தெய்வீக ஆளுமையின் உடலுக்குள் உள்ளது என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். அங்கு, அவர் எல்லையற்ற ப்ரபஞ்சங்களை அவற்றின் அனைத்து அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் காண்பார். ஒவ்வொரு பொருளும் உலகளாவிய வடிவத்தில் உள்ளது, மேலும் அதுபோன்றே கடந்த கால மற்றும் எதிர்கால நிகழ்வுகளும் உள்ளன. இவ்வாறு அர்ஜுனன் ப்ரபஞ்சங்களை வெளிப்படுத்தும் ப்ரபஞ்ச திட்டத்தின் ஒரு பகுதியாக போரில் பாண்டவர்களின் வெற்றியையும் கௌரவர்களின் தோல்வியையும் காண முடியும்.